Q5. உலகின் ஏழு புதிய ஏழு அதிசயங்கள் யாவை?
1. சீனப்பெருஞ்சுவர், சீனா GREAT WALL OF CHINA : சீனாவின் கிழக்கில் ஷாங்காய்ஹுவான்
என்ற இடத்தில் துவங்கி, மேற்குப் பகுதியில் லேப் நூர் என்ற இடம் வரை உள்ளது. சுமார்
8851.8 கி.மீ. கிளைச்சுவர்களையெல்லாம் சேர்த்தால் இது சுமார் 21 ஆயிரம் கி.மீ மேற்பட்ட
தூரத்துக்கு செல்கிறது. இதன் பெரும் பகுதி சீனாவின் மிங் வம்ச மன்னர்களால் கட்டப்
பட்டது. கி.மு 220ல் தொடங்கி, கி.பி. 14-17ம் நூற்றான்டு வரை இதன் கட்டுமானம் நீடித்தது.
இது ஒரு உலகப் புராதனச் சின்னமாகவும் உள்ளது.
2. பெட்ரா, அராபா, ஜோர்டான் -- PETRA: Arabah, Jordan – கி.மு.100 காலத்தைச் சேர்ந்த மலைக்
குடைவுகள். ஹோர் என்ற மலைச் சரிவில் அமைந்துள்ளது. அரேபியன் பாலைவனத்தின் ஓரத்தில், நார்பாட்டியன் சாம்ராஜ்ஜியத்தின் (Nabataean empire) அரசர் நான்காம் அரிட்டாஸ் -ன் (King Aretas IV கிமு 9 முதல் கிபி 40 வரை) தலைநகராக பெட்ரா நகர் விளங்கியது. மத்தியக் கிழக்கு நாகரீகத்தின் அடையாளமாக இன்றும் காணக் கிடைக்கிறது.
3. மீட்பர் கிறிஸ்து. CHRIST THE REDEEMER : ரியோ டி ஜெனீரோ -- ப்ரேசில் -- 1931ல் முடிவுற்றது.
திஜூகா வனப்பகுதியில் கார்கோவேடோ மலை உச்சியில் யேசு கிறிஸ்துவின் சிலை --
சிலையின் அடிப்பகுதியிலிருந்து இது 39.6 மீ/130 அடி உயரமானது.
4. மச்சு பிச்சு, உருபாம்பா பள்ளத்தாக்கு, பெரு -- இங்கா பேரரசு, 1430 காலத்து தொல்லியல்
இடம். 15ம் நூற்றாண்டில் அமேசான் காட்டுப் பகுதியில், உருபாம்பா நதிக்கருகில் ஒரு மலை
உச்சி மீது உருவாக்கப்பட்ட நகரம். இங்கு வாழ்ந்த மக்கள் தொற்று நோயால் அழிவுக்குப்
பிறகு, 1911ல் தான் ஹிராம் பிங்காம் என்பவரால கண்டுபிடிக்கப்பட்டது.
5. சிச்சென் இட்ஸா -- CHICHEN ITZA : மாயன் கலாச்சாரத்து தொல்லியல் இடம் -- யுகடான்
மாகாணம், மெக்ஸிகோ. 8ம் நூற்றாண்டுக்கு முன்பான காலத்தை சேந்தது. சிச்சென் இட்ஷா என்பது, பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக
விளங்கிய புகழ் மிக்க கோவில் நகரமாகும். குக்குல்கானுடைய பிரமிட், சாக் மூல் கோவில், ஆயிரம் தூண் மகால், கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள் காட்டிய அதீத ஈடுபாட்டை
வெளிக்காட்டும் வகையில் இன்றும் காண முடிகிறது. இந்த கடைசி பிரமிட், மாயன்
நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.
6. கொலோசியம் -- ரோமர்கள் காலத்து கேளிக்கைக் கூடம் -- COLOSSEUM OF ROME : இத்தாலி --
கி.பி. 70-82 காலத்து அரங்கம். வெற்றி பெற்ற படையணியினர் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியத்தை பெருமைப்படுத்தும் விதமாக, ரோம் நகர மையத்தில் இந்த பிரசித்தி பெற்ற நடுவட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. வீரர்களுக்கிடையில் கொடுமையான வீரச்சண்டைகள் நடத்தப்பட்ட
அரங்கம். இதன் கட்டுமானம், இன்றைய கால அரங்கக் கட்டுமானங்களுக்கு ஒரு வழிகாட்டி.
7. தாஜ் மகால் -- ஆக்ரா, உத்திரப்பீரதேசம். மறைந்த மனைவியின் நினைவை போற்றும் வகையில், முகலாயப் பேரரசர் ஷாஜகான் உத்தரவுப்படி, இந்த பிரமாண்டமான மசூதி 1630-1653
காலத்தில் கட்டப்பட்டது. இந்தியாவின் முகலாய கட்டிடக்கலையின் மகுடமாக விளங்கும் தாஜ்மகால், நன்கு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் மத்தியில், வெள்ளை சலவைக்கற்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.